பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பத்து

29

இரண்டாம் பத்து 29

நின் மறம் வீங்கு பல்புகழ் முன்னர்க் கேட்டற்கு இனி தாயிருந்தது: நின் பெருங்கலி மகிழ்வாகிய இதுதான் இன்று கண்ணுற் காணற்கும் இனிதாயுள்ளது என்ப்தாம்.

சொற்பொருள் : வயவர் - வலிமையாளர். சேரலாதனை எதிர்த்துக் களத்திற்கு வருவதற்கும் பேரளவு வலிமை வேண்டும் என்பதேைல, அவ்வாறு வலிமையோடும் துணிந்து வந்தாரை வயவர்" என்றனர். அவர் பட்டு அழியவே, பிறர் அஞ்சித் தாமே பணிந்துபோவாராயினர் என்று கொள்க. வாளர் - வாள் மறவர். மயக்கி - சிதைத்து. கடும்பு . சுற்றம்; படைஞர், அமைச்சர், ஒற்றர் ஆகியோர். "தலை என்றது, தலைவனை.

தார் - பிடரி மயிர்: மாலைபோலக் கழுத்துப் புறத்தே தூங்குதலால் 'தார்' என்றனர். வார் - நெடிய; அல்': அசை வழங்கல் - திரிதல். - தோடு - தொகுதி. துயில் ஈயாது - துயில் பெருது. மாதிரம் - திசைகள் பல் புகழ் . பலவான புகழ், பல களத்தும் கொண்ட வெற்றிப் புகழும் ஆம். குளவி காட்டு மல்லிகை. வாடா - உதிராத, பிறந்த போதுள்ள மயிர் உதிர்ந்து வேறுமயிர் புதுவதாக முளைய்ர்த். பைம். பசுமையான: பசுமை என்றது மென்மையையும் அடர்த்தியையும் குறித்தது. ஆடுநடை அசைந்தசைந்து நடக்கும் தளர் நடை. அண்ணல் - தலைமை.

ஞழிறு - வண்டு, பிடிய பிடியைக் கொண்ட நீந்தி . முயற்சியோடும் மெல்லமெல்லக் கடந்து சென்று. தொல் பசி - பழம் பசி, தொடர்ந்து வருத்திய பசித்துன்பம். பழங் கண் - வருத்தம். எஃகு - வாள். வால் - வெண்மையான. மையூன் - ஆட்டுத்_தசை வெண்ணெல் ஒருவகை நெல்; வெள்ளைச் சம்பா நெல் ஆகலாம்; தென்னுட்டுப் பகுதியிலே வெள்ளை' என வழங்கப்படும் நெல்வகையும் ஆகலால். நனை பூவரும்பு. தேறல் - கள்ளின் தெளிவு. இருஞ்சிறகு பெரிய சிறகு, சிதாஅர் - கந்தல்பட்ட துணி. நூலாக் கலிங்கம் - பட்டு: நூலாலாகிய கலிங்கமும் ஆம். விாங்கு. வளைந்த வணர் சுருண்ட வகையின் - குற்றமற்ற குற்ற மாவது, பிறர் பழிக்கத்தக்க குறைபாடு உடைம்ை. மெய் யமர்பு யாத்த ஆடலோடு விரும்பிக் கட்டிய. கலி - ஆர வாரம்; பெருங்கலி - அரசனது ஆரவாரமிக்க திருவோலக்கக் காட்சி. 嶺 -

விளக்கம் : கேள்வியானே மட்டுமே நின்னைப்பற்றி அறிந்து கற்பனையாலே இன்புற்ற யாங்கள், நின்ஞலே