இரண்டாம் பத்து
31
[தம்மை உண்ணுவதற்கு வந்துள்ள எருமைகளைத் தம் இனிமையாலும் மிகுதியாலும் தம்பாற் கவர்ந்து, வேற்றிடம் போகாதபடி தடுக்கும் நெய்தல் பூக்கள் என்று உரைத்த நயமான உவமையினாலே இப் பாட்டு இப் பெயரால் வழங்கப்படுவதாயிற்று. சேரலாதனும் அவ்வாறே தன்னை அடைந்தவர் பிறரை எண்ணாதவாறு வரையின்றி வழங்கும் தன்மையன் என, அவன் கொடைச்சிறப்பையும் உய்த்து உணரவைத்தனர். இதன்கண் வஞ்சியடிகள் விரவி வந்தமையால் வஞ்சித் தூக்கும் இதற்குச் சொல்லப்பட்டது.]
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்
ஏறு பொருதசெறு உழாதுவித்துநவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்
இருங்கண் எருமையின் நிரைதடுக் குநவும்
கலிகெழு துணங்கை யாடிய மருங்கின்
5
வளைதலை மூதா ஆம்பல் ஆர்நவும்
ஒலிதெங்கின் இமிழ்மருதின்
புனல்வாயிற் பூம்பொய்கைப்
பாடல்சான்ற பயங்கெழு வைப்பின்
நாடுகவினழிய நாமந் தோற்றிக்
10
கூற்றடூஉ நின்ற யாக்கை போல
நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகிக்
கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்க் தியங்க
15
ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத்
தாதெரு மறுத்த கலியழி மன்றத்து
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல்தபுத்து
உள்ளுநர் பனிக்கும பாழா யினவே
காடே கடவுள் மேன, புறவே
20
ஓள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன
ஆறே அவ்வனைத் தன்றியும் ஞாலத்துக்
கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக்
குடிபுறந் தருநர் பாரம் ஓம்பி
அழல்சென்ற மருங்கின் வெள்ளி யோடாது
25