பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

பதிற்றுப்பத்து தெளிவுரை

32 பதிற்றுப்பத்து தெளிவுரை

மழை வேண்டு புலத்து மாரிகிற்ப நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெருமநீ காத்த நாடே!

தெளிவுரை : , கோடைக் காலத்தே ஆடுகளைக் கூட்டிக் கிடைமறித்த நீரற்ற வறண்ட வயல்களுள் மழைக்காலத்தே நீர் மிகுதிப்பட்டு ஆரல்மீன்கள் கலித்துப் பல்கிப் பிறழத் தொடங்கும். ஆனேறுகள் தம்முட் பொருதலினலே சேறு பட்ட வயல்கள். மீண்டும் உழுது பண்படுத்தாமலேயே விதைப்பதற்கான பக்குவத்தையும் அடைந்திருக்கும். கரும். புப் பாத்திகளிலே பூத்துள்ள நெய்தல் மலர்கள், பெருங் கண்களை உடையவான எருமைக் கூட்டத்தை, வேற்றிடம் நோக்கி உணவுகருதிப் போகாதபடி தடுப்பனபோல நிறைந் திருக்கும். ஆரவாரம் பொருந்த இளமகளிர் துணங்கையாடி மகிழ்ந்த வீட்டின் புறங்களிலே, வளைந்த தலையினவான கிழட்டுப் பசுக்கள், ஆடும் அம் மகளிரது தழையுடை களினின்றும் சோர்ந்து வீழ்கின்ற ஆம்பல்மலர்களை உண்ட படியே தம் பசியாறிக்கொண்டிருக்கும்.

தழைத்து வளர்ந்துள்ள தென்னைகளையும், பல்வேறு பறவையினங்களும் தங்குதலினலே ஒலியெழுந்தபடி இருக் கும் மருதமரங்களையும், வயல்களுக்கு நீர்பாய்ச்சுதற்பொருட் டாக அமைந்த வாய்க்கால் தலைப்புக்களையும், பூக்கள் மலிந் துள்ள பொய்கைகளையும் கொண்டனவாக, வளத்துடன் நின் பகைவரது ஊர்கள் பலவும் விளங்கும்.

பகையரசரது வளமான அத்தகைய ஊர்கள் பலவும் வளம் சிதைந்து போகுமாறு, நீதான் அச்சத்தைத் தோற்று வித்தாயாய், அவ் அரசரது ஊர்கள்மேற் படையெடுத்தன்ை! சிவப்புற்ற கண்களோடுஞ் சென்றன! நீ தாக்கி அழித்த அப் பகையரசரது அரண்களைக் கொண்ட ஊர்கள் எல்லாம், தம்பழைய தன்மை கெட்டனவாய், அழிவையும் அடைந் தனவே!

கூற்றத்தால் தாக்குண்டு உயிரைப் பறிகொடுத்த பின்னர் எஞ்சிக்கிடக்கும் வெற்றுடலானது, கணத்துக்குக் கணம் தானகவே சிதைந்துகொண்டே போகும். அதுபோல தத்தம் தலைவர்களை இழந்துவிட்ட பகைவர் நாட்டு அரண் களும் தமக்குத் தாமாகவே சிதைவுற்று அழியலாயினவே!

மலர்ந்த பூக்களோடும் கூடியவான கரும்பு வயல்கள் தம் பொலிவிழந்தனவாய்ப் பாழ்பட்டுப் போயினவே! அவ்