இரண்டாம் பத்து
47
16. துயிலின் பாயல்!
துறை : செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : துயிலின் பாயல். இதனாற் சொல்லியது : சேரலாதனின் வெற்றிச் சிறப்பும், அவன் தன் தேவியோடு கூடியிருப்பதான இன்பநிலைச் சிறப்பும்!
[‘எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப் புரையோர் உண்கண் துயிலின் பாயல் பாலும் கொளாலும் வல்லோய்’ எனச், சேரலாதனின் இல்வாழ்வின் இன்பநிலைச் செவ்வியைக் கூறிய நயத்தால், இப்பாட்டிற்கு இப் பெயரைத் தந்தனர்.)
கோடுறழ்ந் தெடுத்த கொடுங்கண் இஞ்சி
நாடுகண் டன்ன கணைதுஞ்சு விலங்கல்
துஞ்சுமரக் குழாம் தவன்றிப் புனிற்றுமகள்
பூணு ஐயவி தூக்கிய மதில
நல்லெழில் நெடும்புதவு முருக்கிக் கொல்லுபு
5
ஏமம் ஆகிய நுனைமுரி மருப்பிற்
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
மரங்கொல் மதகளிறு முழங்கும் பாசறை
நீடினை யாகலின் காண்குவந் திசினே!
ஆறிய கற்பின் அடங்கிய சாயல்
10
ஊடினும் இனிய கூறும் இன்னகை
அமிர்துபொதி துவர்வாய் அமர்த்த நோக்கிற்
சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உரியள்
பாயல் உய்யுமோ தோன்றல்? தாவின்று
திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்
15
வயங்குகதிர் வயிரமோ டுழந்துபூண் சுடர்வர
எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்துப்
புரையேர் உண்கண் துயிலின் பாயல்
பாலுங் கொளாலும் வல்லோய்நின்
சாயன் மார்பு நனியலைத் தன்றே.
20
தெளிவுரை : மலைகளின் முடிகளோடும் மாறுபாடு கொள்ளுவதுபோல மிகவும் உயரமாகவும், வளைந்த இடங்களை