இரண்டாம் பத்து
53
18. கூந்தல் விறலியர்
துறை : இயன்மொழி வாழ்த்து. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு பெயர் : கூந்தல் விறலியர். இதனாற் சொல்லியது: சேரலாதனின் கொடைச் சிறப்பு.
['சமையல் தொழிலுக்கு வருகவென்று, கூத்திற்குத் தம்மை ஒப்பனை செய்தபடியே இருக்கும் ஆடல் விறலியரையும் அழைத்த, சிறந்த விருந்தோம்பும் பண்பு நயத்தாலே இப் பாட்டிற்குக் 'கூந்தல் விறலியர்' என்பது பெயராயிற்று.]
உண்மின் கள்ளே அடுமின் சோறே
எறிக திற்றி ஏற்றுமின் புழுக்கே
வருநர்க்கு வரையாது பொலங்கலரந் தெளிர்ப்ப
இருள்வணர் ஒலிவரும் புரியவிழ் ஐம்பால்
ஏந்துகோட் டல்குல் முகிழ்நகை மடவரல்
5
கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே
பெற்ற துதவுமின் தப்பின்று பின்னும்
மன்னுயிர் அழிய யாண்டுபல துளக்கி
மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட
தண்ணியல் எழிலி தலையாது மாறி
10
மாரி பொய்க்குவ தாயினும்
சேர லாதன் பொய்யலன் நசையே!
கள்ளினை உண்பீராக. சோற்றினைச் சமைப்பீராக. தின்னப் பெறுவதற்கு உரிய ஊனின் துண்டங்களை அறுப்பீராக. புழுக்குதற்குரிய பருப்புவகைகளை உலையிடத்தே ஏற்றுவீராக. இருண்டதும், கடை சுருண்டதும், தழைத்து முடியவிழ்ந்து ஐவகைப் பகுப்பாக முடிக்கப் பெறுவதுமாகிய கூந்தலைக் கொண்டோரே! ஏந்திய பக்கத்தைக் கொண்ட அல்குல் தடத்தைக் கொண்டோரே! முகிழ்த்த இளநகையினையும் இளமைப் பருவத்தினையும் உடையவராய்க் கூந்தலழகால் மிக்கவராக விளங்கும் விறலியரே! இன்னும் வருவாருக்கும் வரையாது உணவு அளித்தலின் பொருட்டாக, நீவிர் அணிந்திருக்கும் பொற்றொடிகள் ஒலிசெய்ய, நீவிரும் சென்று அடுப்படியிலிருந்தபடி சமைத்தலைச் செய்வீராக!
நம்மை நாடி வருகின்ற புதியவருக்கு உணவளித்தலே அல்லாமல், நாம் சேரலாதனிடமிருந்து பெற்ற செல்வங்களி-