இரண்டாம் பத்து
63
சேரலாதனிடம் திறன்மிக்க ஒற்றர்படையினரும் இருந்தனராதல் விளங்கும்.
'ஒன்னார் தேய ஓங்கி நடந்து' என்றது, வெற்றியின் உறுதியோடே படைநடத்திச் சென்ற அவனுடைய செம் மாந்த நடையழகை வியந்ததாம். அந் நடையைக் காணும் பகைவர் தம் மனவலிகெடத் தாமே எதிர்நிற்க அஞ்சியவராக அழிந்துபடுவர் என்பதுமாம். 'ஏறுபோற் பீடுநடை' என்றதும் இது. படியோர் - பகையரசர்; பிரதியோர் என்னும் வட சொல் திரிபு. வடிமணி - வடித்துச் செய்த மணி; வடித்தல் - வார்த்தல். 'வியலரும் பரப்பின் மாநிலம் கடந்து' என்றது, அரணிடங்களையன்றிப் பிற நாட்டுப் பகுதிகளையும் கைக் கொண்டு என்றதாம். 'விரியுளை மாவும், களிறும், தேரும் ஒம்பாது வீசி' என்றது, பகைவரிடமிருந்து கைப்பற்றிய அவற்றைத் தன் படைக்குப் பயன்படுமெனப் பேணுதலின்றி, இரவலர்க்குத் தானங்கொடுத்து என்றதாம். 'வீசி' என்றது, அவற்றை மதித்துக் கொள்ளாது தாராளமாகக் கொடுத்ததைக் குறிப்பதாம். அவற்றைப் பொருட்டாக்காத வளவுக்குச் சேரலாதனிடம் அவை மிகுதியாக முன்பே இருந்தன வென்பதாம். 'புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ' என்றது, பொய்யா நாவிற் புலவர் போற்றிப் பாடப்பாட ஓங்கும் புகழை, அது என்றும் சிதையாவாறு தன் செயலால் நிலைபெறுத்தி என்றதாம்.
'வயிரியர் கண்ணுளர் என்பார் இருவகைப்பட்ட கூத்து இயற்றுவோர் ஆவர். இவர் அவனைக் களத்திடத்தே கண்டு இன்புறுத்த மகிழ்ந்த சேரலாதனும், அவ்விடத்தே கிடைத்த குதிரையும், யானையும், தேருமாகியவற்றை அவர்க்கு வழங்கினான் என்க. "கடிமிளை" முதலியன செப்பமாகப் பொருந்தியிருந்தும் அவ்வரண்கள் அவரைத் காத்தில என்னும் குறிப்புத் தோன்ற, அவற்றை எளிதிற் கடந்த சேரலாதனின் செயலை உரைத்தனர்.
'உள் அழித்து உண்ட' என்றது, அதுகாறும் உண்டிலன் என, அவனது கடுஞ்சினத்தின் தன்மையைப் புலப்படுத்தியதாம். 'அடாஅ அடுபுகை அட்டு மலர் மார்பன்' என்றது, அதனைத் தானே முன்னின்று நிகழ்த்தி, அந்த அழிவினைக் கண்டு பூரித்து மகிழ்ந்த நிலையை உரைத்ததாம்.
'எமர்' என்றது, தன்னையும் தன்னைச் சாந்தோரையும். 'பிறர்' என்றது. பிற பாணர் கூட்டத்தினரை. 'யாவரையும்