80 + பதிற்றுப்பத்து தெளிவுரை
மைந்துமலி பெரும்புகழ் அறியார் மலைந்த போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின் மருதிமிழ்ந் தோங்கிய களியிரும் பரப்பின் மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புறழ் அடைகரை 20
நந்து காரையொடு செவ்வரி யுகளும் கழனி வாயிற் பழனப் படப்பை அழன்மருள் பூவின் தாமரை வளைமகள்
குரு.அது மலர்ந்த ஆம்பல் அருஅ யாணரவர் அகன்றலை நாடே. 25
தெளிவுரை : இலையற்றதாய் உலர்ந்துபோன உச்சி யையுடைய உன்னமரத்தினது அழகிய கவடுபட்ட கிளை யிடத்தே தங்கியிருந்தபடி, சிள்வீடு என்னும் வண்டுகள் கரை யும்படிக்குப் பெரிதான பஞ்சம் வந்துற்றது. அதேைல நிலம் பசுமை நீங்கிற்று: வயல்கள் விளைவின்றிக் கெட்டன. அத் தகைய வறட்சிக்காலத்தினும், நரம்பினலே இழுத்துக் கட்டப் பெற்ற யாழ் முதலியவான இசைக்கருவிகளை இட்டுக்கட்டிய பையினைக் கொண்டவராய், நின் நகரத்தேயுள்ள ஊர் மன்றத்துக்குச் சென்ருேம். அவ்விடத்தே, தெருக்களின் இருபுறத்துமுள்ள வீடுகள்தோறும் பாடிச் சென்ருேம். அப் படிப் பாடிய கூத்தரும் பாணருமாகிய எம் கூட்டத்தாரது கடுமையான பசிநோய் நீங்குமாறு, பொன்ற்ை செய்யப் பெற்ற புனைதற்கு உரிய அணிகலன்கள் ஒலிமுழங்கிக் கொண் டிருக்கப், பெரிதான உவப்புடனே, நெஞ்சத்தே மிக்கெழுந்த உவகையின உடையவராக, எம்மவர் உண்டு, அம் மகிழ்ச்சி யினலே பெரிதும் ஆடிக் களிக்குமாறு, சிறிது கள்ள்ையே உண்ட மகிழ்ச்சியைக் கொண்டவனுயினும், பெரிய அணி கலன்களை நீதான் வழங்கின. போரிலே எதிரிட்ட பகை வரைக் கொல்லும் வன்மைகொண்டு தானமறவரையும், பொன்ற்ை செய்யப்பெற்ற பனம்பூமாலையையும் உடையவ ஞகிய குட்டுவனே!
மருத மரங்கள் தம்பாற்_பல்வேருன பறவையினமும் தங்கியிருந்தபடி ஒலி செய்திருக்க உயரம்ாக வளர்ந் திருக்கும்; செறிவுடைய பெரும் பரப்பிடமாகிய மணல் மிகுந்த பெருந்துறையிடத்தே இருந்த காஞ்சியினிடத்தே முருக்க மரங்கள் தாழ்ந்து பூக்களைச் சொரியும்; அதஞ்லே