பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கடிதத்தை முன்னும் பின்னும் புரட்டிப் பார்க்கத் தொடங்கினர். உறையின் கையெழுத்துக்கள் அவருக்குப் பழக்கப்பட்ட மாதிரி தோன்றின,ஆனால் அனுப்புதல் பகுதி மூளியாய் இருந்தது அது ஏதோ ஒரு 'சஸ்பென்ஸ்' போல அவர் மனத்திற்குப் பட்டது. பெருமூச்சு விட்டவாறு, கை நடுக்கத்துடன் உறையின் முனையைக் கிழித்தார்.

அப்போது, காலத்தின் பனி மூட்டத்தைக் கிழித்தவாறு ஒர் அழகியின் உருவம் அவரது நெஞ்சின் அடித்தளத்தில் விளயாடத் தொடங்கியது. யாமினி' என்று அவர் தம்முள் முணுமுணுத்துக்கொண்டார். அவரது உடலும் உள்ளமும் ஏன் அப்படிப் படபடத்துத் துடிக்கின்றன?..

யாமினியே விதியாகவும், விதியே யாமினியாகவும் அவருள் இயக்கம் பெற்றதன் விளைவாகத்தான், அவர் அவ் வாறு சிலையாய் மலைத்துவிட்டாரோ?...