பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


ஒட்டில் அடித்துக் கொண்டார். சோற்றுக் கையை தரையில் பலம் சேர்த்துக் குத்திர்ை. அவருக்கு அயர்வு கண்டது. சிக ரெட்டு அவரது மண்டை உடைக்கு உதவலாம். விரிந்து கிடந்த அந்தப் புத்தகம் அவரைக் கைதட்டிக் கூப்பிட்டது. "அன்பின் ஆன்மாதான் வாழ்வு, அன்புக்கு வஞ்சிக்கத் தெரியாது. குற்றத்தை மறக்காமல் பழிவாங்கி மகிழ்பவன் ಶ್ಗ ஆவான். அவன் விதி அவனேப் பழிவாங்கியே ரும்....!" 'எனக்காகச் .ெ சா ல் ல ப் பட்ட உபதேசமொழிகளா இவை...? என்னே மணப்பதாக வாக்குக் கொடுத்த யாமினி என்னுடைய குணத்தில் மாசு கண்டு, என்னே நிராகரித்த அந்தக் குற்றமே என்னுடைய விதியாக இயங்கியதன் பேரில் தான், நான் அவளுடைய விதியாகி விளையாடி விட்டேன். அந்தப் பழியுணர்ச்சியின் பாவத்துக்காக கான் இதோ, என் உடம்பையே உருக்கிக் குலத்துக்கொண்டு விட்டேனே !...ஒரு குற்றம் செய்யப்போக, அதன் விளேவாக நிம்மதியிழந்தேன். ஒன்பது குற்றங்களேச் செய்யவும் எனக்கு நானே வினை இழைத்துக் கொண்டேன் !... "ஆம், யாமினிதான் விதியா ? இல்லை; அவள்தான் வினேயா 1. ‘எப்படியோ, நான் இத்தனை காலமும் கரகவேதனை அனு பவித்துவிட்டேன். அவள் தெய்வமா ?... 'இல்லாவிட்டால், என் மனைவி மங்களம் இத்தனை காலம் சும்மா இருந்து, இப்போது கருத்தரித்து, அம்மகிழ்வின் கிலே டிேப்பதற்குள், அவளுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டிருக்க (LP ig.L{LBT ?.... "இனியும், என் பாவத்துக்குக் கழுவாய் தேடிக் கொள்ளா மல் இருந்தால், அப்புறம் நான் என் மங்களத்தை இழந்துவிட வேண்டியதுதான். அப்பால். என்ன நானே இழந்துவிடவும் வேண்டியதுதான் !...”