பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4: யிருந்தது. முகத்தில், அன்பின் ரேகைகள் அழகுற ஒடிக் கிடந்தன. உலகம், வாழ்க்கை, விதி, தெய்வம் போன்ற தத் துவ விளக்கங்களைப் பற்றிய சிந்தனைகள் அவர் அறிவில் மோதின. மேற்படி சிந்தனைகள், அவர் வாழ்ந்த வாழ்வின் தலைப்புக்கு அவரை இழுத்துச் சென்று, பிறகு தொட்ட இடத் தில் விடவும் செய்தன. இங்கிலேயில்தான், அவர் தம் கம்பெனி வாசலில் வந்து இறங்கினர். டிரைவர் பின் கதவைத் திறந்துவிட்டான். அவர் முகப்பில் வந்து கின்ருர். இளங்கதிர்களின் பொன்னுெளி யைப் போற்றிப் பூரித்தவாறு உள்ளே அடியெடுத்து வைத் தார். வழக்கமாகத் தென்படும் மனச் சோர்வு, உடல் தளர்ச்சி இப்போது விடைபெற்றிருப்பதாகவே அவருக்கு ஒர் உணர்வு ஊறியது. கிமிர்ந்த கன்னடையுடன் நுழைந்தார். வரவேற்பறையில் இருந்த குமாரி குயில்மொழி பணி வுடன் எழுந்து வணங்கினுள். அவளேக் கண்டதும் ஏன் அவரது தலே அப்படித் தாழ்ந்து விட்டது ? பதில் வணக்கம் செலுத்திவிட்டு விரைந்தார். சில கணங் களாய் அதுவரை நிம்மதி கண்டிருந்த நெஞ்சை குற்ற மனப் பான்மை ஆட்கொண்டது. திருமால் மருகனை நெஞ்சிலிறுத் தியபடி அவர் தம் இருக்கையைப் பற்றினர். ஜரிகை அங்க வஸ்திரம் அதன் இடத்தை ஆட்கொண்டது லித்தோ அச்சு முறைக்கான இயந்திரவகைகளுக்காக மேற்கு ஜெர்மனிக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்துக்கு வந்திருந்த பதில் கடிதத்தை மானேஜர் முத்துலிங்கம் கொண்டுவந்து காட்டினர். 'பேஷ் : உடனேயே ஆர்டர் செய்துவிடுங்கள்,' என்ருர் செந்தில்நாயகம். சம்பளப் பட்டுவாடா ஆக வேண்டிய விஷயத்தையும் முறைப்படி வெளியிட்டார். அதற்கும் 'ம்' கொட்டித் தலே யாட்டினர். காளைக் கழித்து ஒரு செக்கில் கையொப்பம் இட வேண்டும். தீர்ந்தது கடமை !