பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


உள்பையிலிருந்த சாவியை எடுத்துத் தோல்பையைத் திறந்து, யாமினியின் நிழற்படத்தை எடுத்து ஒருமுறை பார்த்துவிட்டு, அப்படியே ஒரு கணம் சி&லயாகிப்போய், பிறகு சிலேக்கு உயிர் கொடுத்து சுயநினைவு மீட்டி, அப் படத்தைப் பிள்ளேயிடம் கொடுத்தார். பிள்ளை அந்தப் புகைப் படத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் வெட்கப்பட்டவராக அல் லது அப்படிப் பார்ப்பது அநாகரிகம் எனக் கருதியவராக அதை அப்படியே வாங்கி உள்பையில் வைத்துக்கொண்டு சட்டைப் பொத்தான்களைப் போட்டுக்கொண்டார்; எழுந்து சென்ருர். முதலாளியின் உத்தரவுபிரகாரம் குயில் மொழியை உடன் அனுப்புவதாகவும் கூறிச் சென்ருர். செந்தில்நாயகம் சுழல் நாற்காலியில் வாகாகக் குந்திக் கொண்டார். நெஞ்சில் மலர்ந்த சிரிப்பு, உதடுகளே எட்டிப் பார்த்தது. இனி தனக்குக் கதிமோட்சம் கிட்டிவிடும் என்ற நம்பிக்கையின் லயத்தில் அவர் தம்மை மறந்திருந்தார். அப்போது, அவர்முன் யாமினியின் உருவெளித் தோற் றம் மாயமான எழில்வடிவம் அழகே உருவாகித் தோன்றி நகைத்தது. ‘'என்னிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டால், என் வாழ்வு விடிந்துவிடுமென்றும், அதன் மூலம் உங்கள் மனச்சாட்சியும் உங்களே மன்னித்துவிடுமென்றும் மனப்பால் குடிக்கிறீர்களா ?” என்று கேட்டது. பதறினர் செந்தில்நாயகம். 'ஆ' என்று அதிர்ந்தது மனம். முகம், கழுத்து, நெற்றி எல்லாம் நீர் சுரந்தது. "அப்படியென்ருல்...அப்படியென்ருல்...?-மேற்கொண்டு அவ ருக்கு எண்ணத்தை முடிக்கத் திராணி இல்லை. "ப்ளேயர்ஸ் பற்றியது. புகை மணத்தது. இதயம் புகைந்தது. அறையின் அரைக்கதவு கிறிச்சிட்டது. குயில் மொழி வந்து கின்ருள். மல்லிகைப் பூவுக்கென்று இப்படியொரு சுகந்தமா?...