பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
123
8. சித்தாந்த ரத்நாகரம் பற்பல மத (உத்தம வாததூப வாதூலம்) (1881) பற்பல மத உண்மைகளும் இணைந்தவை என ஆசிரியர் ஆய்ந்து அளவிட்டுரைக்கிறார்.
9. சித்தாந்த ரத்நாகரம் (சமரச ஞான தீபம்) (1881) ‘சைவ சமயமே சமயம்’ எனத் தொடங்கும் தாயுமானவர் பாடல் கருத்தை விளக்கி அமைந்த பிரசங்கக் கட்டுரை.
10. சித்தாந்த ரத்நாகரம் (ஆபாச ஞான நிரோதம்) (1883)
11. சித்தாந்த ரத்நாகரம் (ஆசார்யப் பிரபாவம்) (1884) ஆசாரியனின் பெருமை பற்றிப் பேசுவது.
12. சிவரத்ந மகுடம் (1891) ஞான சதுஷ்டய தர்ப்பணமும், ‘திருக்கண்ணப்பர் பிரபாவமும்’ அமைந்துள்ளன.
13. " (1892) 'பிரஹபாதுபதி, ‘பரமதபங்க வினாவிடை’ என்னும் இரண்டும் அடங்கியுள்ளன.
14. சுகாதார போதினி (1891)
15. திராவிட ரஞ்ஜனி (திங்கள்) (1887) “நீதி, பூர்வ சரித்திரம், விநோதக் கதைகள் முதலிய விஷயங்களைக் கொண்டிருக்கிற பத்திரிகை."