பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
129


நாளிதழ்:

1. சுதேசமித்திரன் (1880)

இன்னும் சில பத்திரிகைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன, இவற்றுள் பெரும்பாலன காலமெனும் கடுங் காற்றின் எதிர் நிற்கமாட்டாமல் தலைசர்ய்ந்து விட்டன. ஒரு சில, சில ஆண்டுகள் வெற்றிமுரசு கொட்டி வாழ்ந்தன. இவற்றுள் ஒன்றையும் இன்று காண்பது அரிதாகி விட்டது அல்லவா? இவற்றில் சில ஆண்டு மலர்களும் வெளியிட்டன. 'சுதேசமித்திரன்’ தோன்றிய நாள்தொட்டு (1880) இன்று வரை நம்மிடையே வாழ்ந்து வருகின்றது. தற்போது (1978) நிறுத்தப்பெற்றுள்ளது.

இவ்வாறு மக்களொடு தொடர்பு கொண்டுள்ள பல்வேறு துறைகளிலும் அவர் தம் வாழ்வொடு வாழ்வாய் வழக்கொடு வழக்காய்க் கேள்வியொடு கேள்வியாய்ச் சொல்லொடு சொல்லாய் எல்லா நிலைகளிலும், செயல் களிலும், முறைகளிலும் தமிழ் உரை கலந்து அவர்களை வாழவைத்து, தமிழ் வாழ்வை வளமுறச் செய்து, தானும் வளர்ந்து வாழ்ந்து இந்த நூற்றாண்டின் எதிர்காலத்தை நோக்கி 1901 இல் கால் வைத்தது.

இதன் வேறு சில பிரிவுதளை நாளை காணலாம்.