பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
136

சாரம். இது வேதத்துக்குச் சமானம்-ஐந்தாவது வேதம் இது. இது விஷ்ணு சுப (வ) ரூபம். இந்தப் பாகவதம் பதினெட்டுப் புராணங்களுக்குள்ளேயும் மெத்தப் பெரியது.

(2) பாரதவசனம்: ப்ரபவ-சித்திரை, 27 (1807) முடிவு: இப்படிக்கொத்த மகிமையையுடைய சிவனைச் சேவிச்ச பேருக்கு நினைத்த காரியம் ஈடேருமலிருக்குமோவென்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் சொல்லக் கேட்டு, தர்மராஜா மனசிலேதானே அந்தத் தேவருக்கு நமஸ்காரம் பண்ணினார்.

(3) விஷ்ணு புராண வசனம்;

ஸ்வஸ்திஸ்ரீ விசையாற்புதைய சாலிவாகன சகாப்தம் 1726 கலியுக காத்த 4904 பிரபவாதி சகாப்தம் 57. இதில் சொல்லாநின்ற அத்தாட்சி ஸ்ரீ கார்த்தின ௴ ௮ ௳ பஞ்சமி புனர்பூசம் புதவாரம் இப்படிக்கொத்த சுபதினத்தில் ஸ்ரீவிஷ்ணு புராண வசனம் எழுதி முடிந்தது முற்றும்.

முடிவு: ஸ்ரீமந் நாராயணனுடைய ரூபமும் இந்தப்படி வெகு விதங்களாகப் பிரகிருதபுருஷன் ஆத்மகமாக இருக்கும். இது, ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் ஆருமங்கிசத்தில் எட்டா மத்தியாயம் புராண மகிமை முற்றும்.

(4) பாத்ம புராணம், யுவ-தை 1 (1815)

(புதுச்சேரி நாராயணதாசன் குமாரன் வரதப்பதாசன் பாத்மோத்தர புராணம் எழுதி நிறைந்தது)

முடிவு: சவுனகாதி மகரிஷிகளே: இந்தப்பிரகாரம் வசிஷ்ட மகரிஷியினாலே சொல்லப்பட்ட வனாய் ராஜச்ரேஷ்டனாக தீலீப மாகராசனானவன்