பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
140

இவ்வாறு ஆறுமுக நாவலர் பல்வேறு துறைகளிலும் உரைநடையை வளர்த்துள்ளார். அவர்தம் இலக்கண்ம், தர்க்கம் முதலியன பற்றிய உரைநடையைப் பின்பு காணலாம்.

சென்ற நூற்றண்டில் வாழ்ந்த சமயத் தலைவருள் சிறந்தவராகப் போற்றப் படுகின்றவர் சிதம்பரம் இராமலிங்க அடிகளார் ஆவர். அவர் உரைதடை சிறந்ததென்பதைச் சென்ற நூற்றாண்டிலே வாழ்ந்தவர்களே கூறியுள்ளனர். ஒருவர் (கிறித்தவர்) கூறியதை முந்திய பேச்சில் கண்டோம். அவர் சாதி, சமய வேறுபாடுகளை நீக்க வேண்டும் என்ற அடிப்படை நெறியில் சமரசசன்மார்க்கங் கண்டவர். அவர் எழுதியவை பெரும்பாலும் பாடல்களே அவை ஆறு திருமுறைகளாக வகுக்கப்பெற்றன. அவையன்றிப் பல கட்டுரைகள் உரைநடையிலும் எழுதியுள்ளார். அவர் பல அன்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் இலக்கியங்களேயாகத் தொகுக்கப்பெற்றுள்ளன. அவர்தம் உரைநடைப் பகுதியில் ஒழிவிலொடுக்கப் பகுதி சிறந்தாகும். அதில் ஒரு பகுதியைக் காணலாம்.

வள்ளல்–என்னும் பெயர்:

ஆசிரியர்க்குத் தாம் முன்னிருந்த கிரியாகாரிய நிலைக்கண் அவ்வாசாரிய மரபின் வழித்தாய் வந்த காரண வபீடேகச் சிறப்புப் பெயரென் க. அல்லதூஉம். பின்னர் ஞானாசிரிய நிலைக்கண் தமதருண் ஞான நோக்கானியைந்த கண்ணுடைய வென்னாங் காரண விசேடண மேற்கொண்டு நின்ற இவ்வள்ள லென்னும்-பெயர் ஈண்டவ் விசேடணமிசை யெச்சநிலையி னிற்ப நின்றதெனிலும் அமையுமென்க,

இஃது, வினை, பண்பு முதலியவடுத்த தொகை நிலைச் சொற்றாெடராகாது, தொகா நிலையாய்த் தனைத்தொடர்பயனிலையண்மைப்பொருளுணர்ச்சி யிடையிட்டு நிற்கத் தான் செயயுண் முதற்கண்