பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
148
வுரைக்காது விரிவுறத் தெளிவிக்கும் பெற்றிய தெனின், இந்நூற் பெருமை யளவிட்டுரைக்கும் வரம்பினதாமோ?

பரதத்வப் பிரகாசிகை

இஃது வைதிக சைவசித்தாந்த சண்ட மாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களது அடியவர்களது அடியவர் திருக்கூட்டத்தவருள் ஒருவராகிய சி. பச்சையப்ப நாயகரவர்களால் வெளியிடப்பட்டது.

முகவுரை: நிகழும் ஜய ௵ ஆனி ம௴ 15௳யில் நாமக்கார ரெட்டியாரொருவர் சிறிய பிரகடநமொன்று வெளியிட்டனர். அதில் கிளியனூரில் ஏகாங்கி யென்பவரைக் கொண்டு ௸ ௴ 26௳யில் ஒரு பிரசங்கஞ் செய்விப்பதாகவும், அந்தப் பிரசங்கத்தில் ‘நாராயணனே ஜகத்காரண வஸ்து வென்றும், சிவனுக்கு எவ்வழியாலும் பரத்துவமில்லை யென்றும், அச்சிவன் சீவகோடியிலொருவ ரென்றும், தபசிகளிற் சிறந்தவரென்றும்' அவ்வே காங்கியைக் கொண்டு தாபிக்கம் போவதாகவுந் தெரிவித்தனர். அவ்வளவேயன்றி ௸ தேதியில் அவ்வாறு செய்விக்க அவருக்குத் தெய்வந் துணை செய்யாமற் போயிற்று. ஏனெனின், அவர் கிளியனூரில் சிவநிந்தை செய்விக்தத் துணிந்த பயன் அவ்வூரில் தீப்பிடித்ததென்க, அவரெண்ணிய வெண்ணத்துக்கே தீங்கு விளைந்ததாயின், அத்தீய வெண்ணம் முற்றுப்பெற்றிருந்தால் பின்னர் நடக்கும் ஸம்பவத்திற்குக் கேட்கவேண்டுமா? ஊரார் செய்த புண்ணிய பலத்தால் ஏகாங்கினது அஸ்ப்யமொன்றும் அங்கு நடவாமற் போயிற்று நிற்க.

இந்த ரெட்டியார் தேடிக் கொண்ட ஏகாங்கி யென்பார் வீண் புரளி செய்து பதுங்குவதே