பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
160

1. திரியேகத்துவ நிவாரணம்: (இந்நூல் முகையத்தீன் ஷரீப்பு சாயபு அவர்களாலும் ஷா-முஹம்மது ஜியாவுத்தீன் சாயபு காதரியவர்களாலும் செய்யப்பட்டது.) 1876 சூன் 28 ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.

Bangalore—Printed at the Union Press,
Cavaley Road, No. 220, 15—6—1875.

ஷா-முஹம்மது ஜியாவுத்தீன் சாயபு காதரி அவர்களுடைய உத்தரவு அன்னியில் ஒருவரும் அச்சடிக்கக் கூடாது. அச்சடித்தால் சட்டப் பிரகாரம் நடத்தப்படுவார்கள். (The Copyright is preserved)

இப்புஸ்தகம் தேவைபுள்ளவர்கள் திருநெல்வேலி ஜில்லா கசுப்பா சாலியா தெரு ௧௦௩ நிம்பர் வீட்டிலிருக்கும் மகா-௱-௱-ஸ்ரீ முஹம்மது மதார் சாயபு அவர்கள் குமாரர் ஷா-முஹம்மது ஜியாவுத்தீன் சாயபு காதரி அவர்களிடமிருந்து வர வழைத்துக் கொள்ளலாம்.

இந்நூல் மஹமது சமய உயர்வையும் இயேசு அனாதி அல்ல என்பதையும் இயேசு அல்லாவின் குமாரன் என்பார் கூற்றுத் தவறு என்றும் விளக்குவது.

காரணம்: அல்லாஹுத்தாலா ஏகமாயும், முகம்மத் ரசுலுல்லாவவர்கள் அல்லாஹாத்தாலாவின் தீர்க்கதரிசி யென்கிற நபியாயுமிருப்பதைப் பற்றி அரபி—பார்சி-ஹிந்துஸ்தானி பாஷைகளில் அநேக கிதாபுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தப் பாஷைகளை யறியாதவர்கள் அச்சங்கதிகளைத் தெரிந்து கொள்ளக் கூடாதவர்களாயிருக் கிறபடியால் அதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியதற்காகவும், உல்லியம் றாபட்டுசன் எக் மான் துரையுடைய கலாசத்துல் குதுப்புக்கு ஜவா