பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
161


பாகவும் இத்தேசங்களில் வழங்கப்பட்ட தமிழ்ப் பாஷையில் எழுதும்படி முகமதியர்கள் கேட்டுக் கொண்டபடியால் (சுருக்கமாய் எழுதி) 1874-இல் (நாங்கள் இருவரும்) 7 அதிகாரங்களில் எழுதி ஹிந்துஸ்தானியில் ரத்தேதஸ்லீஸ் என்றும் தமிழில் திரியேகத்துவ நிவாரணம் என்றும்பெயரிட்டோம். பொறாமையும் ஆங்கார முதலான துர்குணங்களையும் நிவர்த்தி செய்து நீதியுள்ள பார்வையினால் படித்துப் பார்க்கிறவர்களுக்கு அவைகள் ஞாயமானவைகளென்று வெளியாகும்.

இயேசு எங்கும் வியாபகரல்ல-இயேசு குமாரன் என்பது பொய்-விக்கிரக ஆராதனை பாவம்-உபதேசிகளை இயேசு நிந்தித்தது—முதலியனவற்றை விளக்கி, பெரும் பகுதியில்'நபியவர்கள்' தன்மையைக் காட்டுவது. (மொத்தம் 236 பக்கம்)

2. முகியீத்தினாண்டவர்கள் மெளலிதில் ஓர் பைத்தும் றசூல் நாயகம் பேரில் கசீதாவும் அடங்கியிருக்கின்றன. (பாட்டு)

முன்னுரை: அச்சிட்ட வரலாறு.

எல்லா வுலகங்களையு முயிர்களையும் படைத் திரட்சித் தரசாட்சி செய்யும் வல்ல காரணனை அல்லாகுத் ஆலாவுடைய திருத்தூதர்களான இலட்சத் தருபத்து நான்காயிர நபிகளென்றுந் தீர்க்கதரிசியருட் சிறந்த தலைமையரான முந்நூற் பதின்மூன்று முறுசல்க ளென்றும் தீர்க்கதரிசியர் கட்கு நாயக சமேதராகவும்-சகல படைப்பினங் கட்கு முற்பட்டவராவும்-மோட்ச காருண்யராகவும்-தீட்சானுகூல சுவந்தரீகராகவும்-மாட்சிமை தங்கிய ஆட்சிகொண்டு, காட்சிதரவந்த காரண கடவுள், ஹபீ புறப்பில் ஆலமீன், செய்துல்க கெளனைன், செய்யிதுல், முனுசலீன், தாஜுல்ல