பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
162

பியா, முகம்மது, முஸ்தபா, றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின்-இயற்கையுஞ் செயற்கையுமாகிய காரண சரிதங்க ளனேகங் கணக்கிடக்கூடாதவைகள் அறபுப் பாஷையிலுண்டா யிருக்கின்றன.

—அவற்றின் மொழிபெயர்ப்பு இது.

3. மகமதிய லா சுருக்கம்

இஃது சதர் கோர்ட்டு பிளிடராகிய வ. சடகோபாசாரியரால் இங்கிலீஷில் செய்யப்பட்டு மேற்படி கோர்ட்டு பிளிடராகிய பி. எல். வ. இராசகோபாலாசாரியரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

நான்காம் பதிப்பு 1869

புஷ்பரதச் செட்டியாரவர்களது கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது...

இதை தேச பாஷையிலும் செய்தல் வெகு பிரயோஜனமாயிருக்குமென்று யோசித்து நான் அந்த கிரந்தத்தைத் தமிழில் செய்தேன். இதில் தாயா விஷயம் வெகு கடினமானதாகையால், அதை இதில் சொல்லியதைக் காட்டிலும் தெளிவாய்ச் சொல்லுவது அசாத்தியமென்பது இதைப் படித்துத் தேர்ந்தவருக்கு நன்றாய்த் தெரியும்...

தாயம்—தான விஷயம். விக்கிரயாதி வியவ காரங்கள் - லெளாகீக சம்பந்தங்கள்.

4. நசீஹத்துல் இசுலாம் ஹனபிய்யா (தொழுகை முதலியன பற்றி)

காயற்பட்டணம். கண்ணகுவது மருதுாமுகம் மதுப் புலவர் கிசுறத்த (ஹிஜிரா திவாசலிங்) கி. பி. 1880)