பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
169


கட்டளையிட்டுத் தமது திவ்ய தரிசனை யளிக்கும் பொருட்டுச் சர்வ கிருபையுடைத்தான சர்வேசுரனை யனுதினம் பிரார்த்தித்துக் கொள்வீராக.

என்பது ஒரு குறிப்பு.

இத்தகைய நூல்களில்,வடமொழி ஆதிக்கம் இட்ம்பெறவும் ஒரு காரணம் இருக்கலாம். இந்நாட்டில் உள்ள சமய நூல்களில், பிற இலக்கியங்களில் இல்லா வகையில் அதிகமாக வடமொழிச் சொற்களும் தொடர்களும் எடுத்தாண்டிருப்பதைக் கண்ட இச்சமயத்தவரும் தம் சமய இலக்கியங்களும் இந்த வகையில் அமைந்தால்தான் சிறப்புறும் என எண்ணி இருக்கலாமன்றோ! தம் புறத்தோற்றத்தைமாற்றித் தமிழ் நாட்டுக் கோயில்களில் பணியாற்றும் 'ஐயர்’ போன்றே தோற்றமளித்து, ‘ஐயர்’ என்ற பெயரையும் துட்டிக்கொண்டார்கள் எனக் காணும்போது, அந்த அடிப்படையிலேயே அதிக வடமொழிச் சொற்களை எடுத்தாண்டார்கள் என்றுசொல்வதில் தவறில்லைஎன எண்ணுகிறேன். எளியவர்கள் புரிந்துகொள்வதற்கென இலக்கண வழுவும் தெரிந்தே மேற்கொண்டுள்ளார்கள் என்பதை ஒரு நூலின் பாயிரத்திலேயே அதைப் ‘பிரசுரப் படுத்தியவர்' குறிக்கின்றார்.

இப் புத்தகத்தை யாவரு மெளிதில் வாசித்துணர வேண்டி, இலக்கண விதிப்படி எழுத்துக்களும் சொற்களு மிகுந்த புணர்ச்சி விகாரங்களின்றிச் செந்தமிழுடன் கொடுந்தமிழ் மொழிகளுஞ் சில வாக்கியங்களிலொருமையிற் பன்மையும் பன்மையிலொருமையும் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன.

எனத் தம் நூலாகிய சிலுவைப் பாதையின் ஞான முயற்சி பற்றித் தம் நடைக்குத் தாமே விளக்கம் தருகிறார் ஞானப் பிரகாச சுவாமிகளென்னு மாசிரியர். இந் நூல் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் செய்யப்பட்டு 1849தில் அச்சிடப் பெற்றுள்ளது. இதிலுள்ள “செபம்“ வடமொழிச் சேர்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

11