பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
174
அதை தியானிப்பதினால் நமக்குள்ளிருக்கும் பாவத்தின் பெலன் குறைகிறது. உலகத்தைப் பற்றிய வெறுப்புண்டாகிறது. துர் ஆசைகள் இன்பங்கள் அழிகிறது. பரலோக வாஞ்சை மேலிடுகிறது.

உரைநடை நூல்களே யன்றிச் சிறந்த செய்யுள் நூல்களும் சென்ற நூற்றாண்டில் வெளி வந்தன. கிருஷ்ணப் பிள்ளை அவர்கள் எழுதிய இரட்சணிய யாத்திரிகம் என்ற நூல் அவற்றுள் சிறந்ததாகப் போற்றப்படுவதாகும். வீரமா முனிவரால் எழுதப்பெற்றுச் சென்ற நூற்றாண்டில் (1849இல்) வெளியான தேம்பாவணியும் சிறந்த இலக்கியமாகும். இரண்டும் பாடல்களேயாயினும் அவற்றின் விளக்கங்கள், முன்னுரை ஆகியன உரைநடையில் தாமே உள்ளன. தேம்பாவணிக்கு வெளியீட்டாளர்களே (பிரசித்தப்படுத்தியவர்) முன்னுரை எழுதியுள்ளனர். எனவே இந்நூல்களின் முன்னுரைகளும் ஈண்டு எண்ணத் தக்கனவே.

இரட்சணிய யாத்ரிகம்: முன்னுரை: எய்ச். ஏ. திருஷ்ணப்பிள்ளை, முதற் பதிப்பு: 1—5—1894,

திருவருட் பலத்தால் என் உத்தியோக விஷயத்திற் செலவிட்ட நேரம்போக மீந்த நேரங்களிலும் விசேஷமாய் வியாதிக்கப்பட்டிருந்த இராக் காலங்களிலும் உழைத்து இந்த நூலைச் செய்து முடிக்க அருகனானேன். ஆரம்பந்தொடங்கி உத்தேசம் ஆயிரஞ் செய்யுள் முடியுமட்டாக (பின்னே யெனக்கு ஜீவன் கிடைத்த போதிலும்) இந்த நூலைப் பூரணமாய்ப் பாடி முடிப்பேனென்ற நம்பிக்கை கிஞ்சித்து மில்லாதிருந்தது. ஆனபோதிலும், அப்போதப்போது பாடி முடிந்தவற்றில் பாளையங்கோட்டையில் மாஸந்தோறும் பிரசுமாகிற 'நற்போதகம்' என்னும் பத்திரிகையில், கொஞ்சம் கொஞ்சம் அச்சிடு வித்து வந்ததினால், அம்மட்டில் வித்வான்களான சில சிநேகிதர் வாசித்துப் பார்த்துத் தமிழ் நாட்டில் இது பிரயோஜனப்படக்கூடியது. 'இளக்கரியாது