பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
176
மறைந்த விவ்வுத்தம காப்பியமெங்கணு மிகுகீர்த்திப் பேர்பெற்றுச் சுகிர்தவொளி பரப்பி விளங்கியிருப்ப வீரமா முனிவரது கையெழுத்துப் பிரதிக் கொப்ப வச்சடித்த பிரதியாய் வெளியிட்ட பின் பதிக, தெளிந்த பிரகாசக் கதிர் வீசி மேன்மேலும் பிரபலியமாமென்று நம்பிக் கொள்ளுகிறோம்.

இவ்வாறு பல வகைகளில் கிறித்தவ சமயத்தார் தமிழ் உரைநடையில் பல்வேறுவகை நூல்களை எழுதித் தம் சமயத்தை வளர்த்துக்கொண்டதோடு, தமிழ் உரைநடை வளரவும் பெரிதும் பாடுபட்டனர்.

இலக்கண இலக்கிய உரைகள்

சமயச் சார்பான உரைநடை நூல்களைத் தவிர்த்துப் பொதுவான வகையில் நல்ல உரைநடை நூல்களும் வெளி வந்தன. சில பழம்பெரும் இலக்கியங்களுக்கு உரைகள் பல சென்ற நூற்றாண்டில் வெளிவந்தன. மேலும், இலக்கணம், மொழிபற்றிய நூல்களும் தமிழில், உரை நடையில், எழுதப் பெற்றன. எனவே இவையும் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி செய்தனவாக அமைகின்றன. சிறந்த நாடகமாகிய மனோமணியத்தைப் பாவால் இயற்றிய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் சாத்திர சங்கிரகம் என்னும் நூற்றாெகை விளக்கத்தை எழுதி வெளியிட்டுள்ளனர் (1888). இந்நூலின் வழி ஆசிரியர் நூல்களை அவர் காலநிலைக் கேற்பப் பிரிக்கும் வகைகளை விளக்குகிறார். அவர் வாக்கின் வழியே காண்போம்.

முகவுரை: தற்கால நிலைமைக் கேற்ப சாஸ்திரங்களை எத்தனை வகுப்பாய் வகுக்கலாமென்பதும் அவற்றின் முக்கிய முறைமையும் விஷயமும் என்ன வென்பதும் ஆம் வகை எடுத்து விளக்குவதே கீழ்வரும் நூற்றாெகை விளக்கப் பொதுவியலின் தலைமையான உத்தேசம். இது திருவிதாங்கோட்டுக் கவர்மென்றாருடைய நூதன பிரசங்க