பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
187

இவ்வாறு பலவகையில் கால்டுவெல் தம் உரைநடையைத் தீட்டிக் காட்டுவதோடு, இந்நாட்டுப் புலவர்களுக்கு உரைநடையில் பொருளைத் தெளிவாக விளக்கும் திறன் இல்லை என்ற குற்றச்சாட்டையும் சூட்டுகிறார். இஃது ஆராய்தற்குரியது. இதன் கருத்து நல்ல உரைநடை நம்மவருக்கு எழுத முடியவில்லை என்பதாகலாம் என்பர். அதுவும் பொருந்தாது. நிற்க, இரேனியஸ் என்பார் 1853இல் எழுதிய உரைநடைக்கு ஒரு சான்று காண்போம்.

மெழுகானது முத்திரையைப் பெறுதலன்றி, அதைப்பற்றிக்கொள்ளுந் தன்மையுமுள்ளதா யிராவிட்டால், முத்திரைக்குத் தகுதியாயிருக்க மாட்டாது. அதுபோல ஆத்மா அறிவும் யோசனை யுமுடையதாயிருக்கவேண்டும். அறிவானது ஒன்றைத் பெறுதற்கான கருவி. யோசனையானது அதைப் பற்றிக் கொள்ளுதற்கான கருவி. யோசனையாகிய கருவியின்றி அறிவாகிய கருவி மாத்திர முடையதானல் ஆத்மா மெழுகைப் போலல்ல, சலத்தைப் போலிருக்கும். எப்படியெனில் சலத்தில் எதையாகிலுஞ் சீக்கிரமாய்ப் பதிக்கலாம். பதித்தவுடனே அது தோன்றாமற்போகும்.

பவர் பாதிரியாரும் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு உதவியவர் என்பதை நாடறியும்; எனவே அவர் வாக்கிலும் ஒன்று காணலாம்.

உலகம்: இந்த உலகம் அநாதியாய் நிலை பெற்றிருக்கிறதென்றும் ஒரு காலத்தில் அழியாத நிலைமையை உடையதென்றும், கடவுள் முதலிய யாவராலும் உண்டாக்கப்பட்டதல்லவென்றும், நிச்சமாய்ச் சொல்லுகிறர்கள். இதுவுமல்லாமல் இந்த உலகம் கீழுலக மென்றும் நடுவுலக மென்றும் மேலுலகமென்றும், மூன்றாயிருக்கிறதென்றுஞ் சொல்லுகிறார்கள். மேலும் இந்த உலகத்தினுள் அடியில் அதோகதியென்று பேருடைய