இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என்று சிந்தாமணி நாமகள் இலம்பக உரைவிளக்தில் (பக் XII &XIII) (1868) குறிக்கின்றார். இவரே அன்றிப் பெர்சிவல் பாதிரியார் முதலிய வேறு சிலரும் பழமொழிகள் பற்றியும் தமிழ் மொழி முதலியனபற்றியும் தமிழ் ஆங்கிலம் எனும் இருமொழிகளிலும் எழுதியுள்ளார்கள்.
இவர்களை விடுத்துச் சுகாத்தியர் (Scott) என்னும் மற்றாெருவரைப் பற்றி எண்ணும்போது அவர் செய்த தமிழ் எழுத்து மாற்றம் நமக்கு வியப்பை அளிக்கும் என்பது உறுதி. ஐ, ஒள என்ற ஈரெழுத்துக்களைப்பற்றி அவர் கூறியவற்றை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன் (1889),
வடமொழி எழுத்தாகிய ஐ, ஒள எனப்படுமெழுத்துக்கள் தமிழ்ற் காரணமின்றிச் சேர்ந்துள வாதலாலும் அவற்றுள் ஒள இந்நூலுளெவ்விடத்தும் வரப் பெறாமையாலும் ஐ க்கு வடமொழிக்குரிய வரிவடிவயொழித்துத் தமிழ் முறப்மய்க் கிணங்க அகரயகர வரிவடிவாகவும் ககர வோசயய்த் தழுவி முப்புள்ளி வடிவினதாய் வழங்கி ஆய்த எழுத்துத் தமிழோசய்க்கு வேண்டு வதின்மயா லதற்குரித்தான ககர வடிவாகவும் வரய்தலாயின.