பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
191


சிவமயம்-அன்புள்ள அம்மானவருக்கு விண்ணப்பம். இவ்விடத்தில் யாவரும் க்ஷேமம். அவ்விடத்திய க்ஷேமம் அறிவிக்கச்சொல்லவேண்டும். மணியார்டர் செய்தனுப்பிய கடிதத்திற்கும் பதில் வரவில்லையென்று மனவருத்தத்தோடுபின் எழுதிய கடிதத்திற்கும் பதில் வரவில்லை, இந்தக் கடிதம் கண்டவுடன் மணியார்டர் வந்துசேர்ந்த செய்திக்குப் பதிலெழுதச்சொல்லவேண்டும், மணியார்டர் கெடு தப்பிப்போகுமுன் பணம் வாங்கிவிட வேண்டும், கடிதம் வந்து சேருமென்ற நம்பிக்கையினால் இதை நட்டுப்பயிடாக[1] அனுப்பினேன்.

சுக்கில, ஆடி-27

இங்ஙனம்.

1870-திருவனந்தபுரம்

சி. சாமிநாத தேசிகர்.


ஸ்ரீமத் சகல குண சம்பன்ன சுகண்டித லக்ஷ்மி அலங்கிருதஆசீருதஜனரக்ஷக மஹாமேருசமமான தீரர்களாகிய கனம் பொருந்திய மகா ராஜமான்ய ராஜஸ்ரீ பிள்ளையவர்கள் திவ்ய சமுகத்திற்கு ஆசி ருதன் திருமங்கலக்குடி சேவைடியங்கார் அநேக ஆசீர்வாதம்.

இவ்விடம் தஞ்சையில் தங்கள் பெருங்கருணையால் க்ஷேமமாயிருக்கிறேன். தங்கள் க்ஷேமசுபாதி சயங்கட்கெழுதி யனுப்பும்படி உத்தரவு செய்யப் பிரார்த்திக்கிறேன். தாங்களன்புடன் வரைந்தனுப்பிய நாளது மாதம் 22 உள்ள கடிதம் கிடைத்தது. கோயிலுக்கு இதற்குமாயலைந்து கொண்டிருந்ததால் பங்கி யனுப்பத் தவக்கப்பட்டது. அதை மன்னிக்கவேண்டும். இவ்விடம் வேந்திருக்கைக் கலைமகள்விளக்க இவ்விடத்திலிருந்து எழுதுவித்த ஸ்ரீ அம்பர் க்ஷேத்திர புராணக் கிரந்த புத்தகம் க-க்கு ஏடு ௪0 ௸ புத்தகத்தை இத்துடன் பங்கி

  1. Not Paid ஆக (தபால் தலை ஒட்டாமல்)