பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
192
மார்க்கமாய்த் தங்களிடத்திற்கு அனுப்பியிருக்கிறேன். வந்து சேர்ந்ததற்குப் பதில் கடிதமனுப்பப் பிரார்த்திக்கிறேன்.
இங்ஙனம் தங்களாருசிதம்

சுக்கில மார்கழி -௭. தஞ்சை.

தி. சேவுையங்கார்.

டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் தியாகராசச் செட்டியார் அவர்களைப் புகைப் படம் எடுக்க விரும்பினார். ஆயினும் செட்டியார் அவர்கள் மெலிந்து உடல் நலிவுற்றிழிந்தமையால் தமக்கு விருப்பமில்லை என்பதைப் பின்வரும் கடிதத்தில் விளக்கியுள்ளார்.

...என்னுருவத்தை போட்டகிராப் எடுக்கும்படி தாங்கள் உத்தரவு செய்தீர்களாம். யான் குரூபம் அடைந்த காலத்தில் எடுக்க எனக்குச் சம்மதம் இல்லை. அன்றியும் நல்ல உடை உடுத்துக்கொண்டு ஒருநாழிகை அசையாதிருக்கச் சற்றும் பலமில்லை. படுத்துக்கொண்டே யிருக்கிறேன். நேத்திரம் இரண்டு நிமிடம் சேர்ந்தாற்போலவிழித் திருக்கக்கூடவில்லை. இந்த ஸ்திதியில் உருவம் எடுப்பது சற்றும் தகுதியன்று. தாங்கள் இவ்விடமிருந்துபோன நாள் முதல் நாளது பரியந்தம் போகும் வயிற்றுப் போக்குச் சற்றும் நிற்கவில்லை. அன்னம் செல்லவில்லை. காரமும் சேரவில்லை.

தேகம் விளர்ப்புடன் மிக மெலிந்து விட்டது. ஆதலால் நான் செவ்வையாயிருக்கும்போது காலேஜ் ஸ்தம்பத்தில் உருவம் ஒன்று செய்யப் பட்டிருக்கிறது. தெற்குத் தாழ்வாரத்தில் கீழ் புறத்தில் இருக்கிறது. கோபாலராயரவர்களுடைய உருவம் குதிரையில் இருந்ததுபோல ஒரு பக்கத்தில் செய்யப்பட்டிருக்கிறது. நல்ல மொச்சியன் அகப்பட்டால் அந்த உருவத்தைக் காண்பித்துக் கூடிய வரையில் ஒரு படம் எழுதி எடுத்துக் கொண்டால் அதை வைத்துக்கொண்டு போட்ட