பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
195


புத்தகத்தால் இனி தூரவிலகிப் போகுமென்று சொல்வதற் கனுமானப்பட வேண்டியதில்லை.

இவ்வித நன்மைகளைத் தருவதற்காதாரமாக விப்புதகத்தைத் தாங்கள் வருந்திச் செய்த நன் முயற்சியைக் குறித்து யாவர்தானன்றி கூறாதவர்களா யிருப்பார்கள். இவர்களில் நான் முதற் புருடனாக விருக்கிறேன்.}}

சென்னப்பட்டனம்

இங்ஙனம்

சோபகிருது, மார்கழி

வேலூர் வரத முதலியார்

முடிவு

இவ்வாறு கடிதங்களும் தமிழ்உரைநடையை வளர்க்க உதவி செய்தன. இவ்வகையில் தமிழ் உரைநடை சென்ற நூற்றாண்டில் யாண்டும் நீக்கமற நிறைந்து நின்றது. எனவே இந்த மூன்று சொற்பொழிவுகளிலும் உரைநடையின் இயல்பினையும், தமிழ் உரைநடை தோன்றி வளர்ந்த வகையினையும், சென்ற நூற்றாண்டின் தமிழ் நாட்டின் சூழ் நிலையையும் அதன் வழி நாட்டில் உண்டான மாறுதல்களையும் அவற்றின் வழி, கலை, இலக்கியம் வளர்ச்சி பெற்ற வகையினையும், அவற்றுள் தமிழ் உரைநடை எவ்வெவ்வாறு வளர்ச்சி பெற்றதென்பதையும் பாமர இலக்கியமாய், பண்டிதர் இலக்கியமாய், நாநவில் இலக்கியமாய், நாடறிந்த இலக்கியமாய், சமய, தத்துவ, அறிவியல் துறைகளில் இடம் பெற்ற இலக்கியமாய், சென்ற நூற்றாண்டில் அவ்வுரை நடை வளர்ச்சிபெற்ற பலவகைகளையும் ஓரளவு கண்டோம். அவ்வாறாய உரைநடை இலக்கியங்களுள் ஒருசில போகப் பலவற்றை இன்றளவும் காணும்பேறு பெற்றுள்ளோம். இனி அவை மங்காது காக்கப்பெறும் என்பதற்கும், இத்துறையில் புத்தம் புதிய நெறியில் உரைநடை இலக்கியங்கள் வளரும் என்பதற்கும் எதிர் நிற்கும் பல நல்வாய்ப்புக்களை எண்ணும்போது உளமகிழ்ச்சியுறுகின்றது.