பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
201

இப்போது ‘சரபோசி மகராஜா’ சகல சனத்தையும் சகல மதஸ்தரையும் வைம்மியம் அன்றியில் சந்தோஷமாய் அந்தந்த மதத்து வேதத்தின்படியே நடப்புவித்துச் சகல சனத்துக்கும் விசனம் வாராமல் படிக்கு யுக்தமார்க்கமாய்ப் பரிபாலனம் பண்ணிக் கொண்டு எப்போதும் சிவபூஜை பண்ணிக்கொண்டு சிவபுராணங்கள் முதலான உத்தம சரித்திரங்களைக் கேட்டுக் கொண்டு யாத்திரிகளையும் பண்ணிக் கொண்டு சன்மார்க்கத்திலே இருக்கிறார்.

நூற் குறிப்பு:

ஸ்ரீமத் போசல வமிசத்தின் பூர்ண சந்திரன் இந்துபதி கிரேஷ்டராய் இருக்கப்பட்டவர். ஸ்ரீ சாம்பசிவ பிரசாத பிரபாவத்தினாலே அடையப்பட்ட பிரதாபத்ததினாலே டில்லி, சாத்தூர்ப் பாகத்துக்குச் சுவாதந்திரியர் டில்லியுடைய ராஜாவுக்கு விபஷ்சத்து யோக்கியம் சராவ பெளம ராஜாக்களுக்கெல்லாம் சோபாயமானர். மகாராஷ்டிர தேசம், சோள தேசம், அதிபதியாயிருக்கப்பட்ட புண்ணிய சுலோக ராஜாக்களுடைய சரித்திரம்:— சகல மனோபிஷ்டத்தையும் கொடுக்கப்பட்டதை மகாராஷ்டிர பிராமண சாதி (யார்) இப்போது சோழ தேசாதிபதி ஸ்ரீமத் க்ஷத்திரியபதி மகாராஜா, ராஜஸ்ரீ “சரபோஜி ராஜா சாயபு’ அவர்களுடைய கிஜசேவகன் “கிட்டின” சாலிவாகன சகம் ௲௭௱௨௰௫௵ உருதிரோத்காரி ௵ சித்திரை ௴ A, D. 1803 ௵ மார்ச்சு ௴ ௨௰௫௳

10. பிரசித்த பத்திரிகை

புதுவையிலச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்தின புஸ்தகங்களாவன.


புதுவையில் —மற்றவிடங்கள்
ரூ. ரூ,
ஞானாமிர்த தடாகம்
வேத விளக்கம்

13