பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
206

குள்ளாரையுஞ் சாரும். அவர்களைச் சேராத சில காரியங்களைக் குறிப்போம்.

16. அத்வைத தூஷண பரிகாரம்; ஓர் இந்து (1894)

உலகு சத்து மல்ல. அசத்து மல்ல. சதசத்து மல்ல. அநிர்வசனியம் பிரமம் எல்லாமாய் விரிந்ததென்னின் பொருளாய் விரிந்ததென்பது அத்வைதிகளுடைய சித்தாந்தமன்று. கயிறு அரவாயிற்று, கானனீராயிற்று என்பதில் கயிறு முதலியன அரவு முதலியனவாதல் தோற்றமேயன்றிப் பொருளல்ல. இதுதான் அத்வைதிகளுடைய சித்தாந்தம். கானல்நீர் விஷயத்திலும் இவ்வாறே, அம்மனத்தில் ஓர் சக்தியுள்ளது- அது அவாந்தர சக்தி; அன்றிப் பின்னா சக்தி. அந்தச் சக்தி மனத்திற்கு வேறுமல்ல. மனமுமல்ல. அச்சக்தி சத்துமல்ல. அசத்து மல்ல. சதசத்துமல்ல. அனிர்வசனியமாம். கடவுள் இந்திரியத்திலுைம், மனத்திலுனும், ஜீவான்மாவிலுைம் காணப்படாதவர். இதனால் கடவுள் அபரி பூரணர்.

17. திரு அருட்பா உபதேசப் பகுதி: ஆர். பாலகிருஷ்ணபிள்ளை பதிப்பு (1932) வள்ளலார்.

இந்த உபதேசப் பகுதியில் அடங்கியுள்ளவற்றில் பெரும்பாலான, சுவாமிகள் தம்மை அடுத்த அன்பர்களுக்கு வாய்மொழியாக வடலூர் தருமச்சாலையிலும் மேட்டுக்குப்பம் சித்திவளாகத்திலும் உபதேசம் செய்தவற்றை, அவ்வன்பர்களில் ஒருசிலர் எழுதிவைத்த குறிப்புகளாகும். ஒர்ஓர் இடத்தில் அங்ஙனம் உபதேசித்த அல்லது எழுதிய தேதியும் இடமும் காணப்படுகின்றன. ஆனால் ஓரிடத்திலாவது இவற்றில் ஒன்றையோ பலவற்றையோ எழுதிய பேரன்பர்களின் பெயர்கள்முதலியன குறித்திருக்கக் காணப்படவில்லை.