பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
39

உண்டாக்கிறபோது எதாலே எப்படி எதுக்காக
உண்டாக்கினர் என்றும் சொல்லிக் காட்டுவோம்.
(ஐந்தாம் பிரசங்கம்)’

இவர் ‘சல்லாபம்’ என்று குறிக்கும் நூல்களெல்லாம் வினவிடையாக அமைகின்றன. இவற்றின் நடை இன்னும் கொச்சையாகவும் மிகச் சாதாரணமாகவும் அமைந்துள்ளது.

   குரு: இரண்டாஞ் சல்லாபத்திலே நம்மாலே உபதேசிக்கப்பட்டதெல்லாம் நன்றாய்த் தெளிஞ் சாயானால், இப்பாலும் அறிய வேண்டியதை சங்கோசப்படாமல்க் கேட்பாயாக;-

   சீஷன்: பராபர வஸ்துவினிடத்திலே படைப்புண்ட புத்திக்குள்ளே அடங்காத சத்தியங்கள் உண்டென்றும் அப்படிப்பட்ட அடங்காத சத்தியங்களை அறிய வேண்டினதாயிருக்கு மென்றும் அருளிச் செய்தீர். பிரத்தியக்ஷ தெரிசனத்திலே யானாலும் (அனுமான தெரிசனத்திலே என்கிலும்?) அதுகளைப் புத்தியானது சென்று புடிக்கக் கூடாமலிருக்கச் செய்தே, அதுகளை யெந்தக் காரணத்தினலே அறியலாம்?

இவ்வாறாக அவர் நடை செல்லுகின்றது. அவர் நடையைக் கண்ட அதே நிலையிலே விரமாமுனிவருடைய உரைநடையிலேயும் இரண்டொன்று கண்டு தெளியலாம், அவர் தம் நூலுள்ளும் பல சென்ற நூற்றாண்டில் அச்சேறினவேயாம். ‘அறன்’ எனும் பொருள் பற்றி அவர் காட்டிய விளக்கம் சிறந்ததாக உள்ளமையின் அதைக் காணலாம்.

‘வேதநூல் முதலெவ்வகை நூலுக் கல்லா துணரவுஞ் சொல்லாலுணர்த்தவும் வல்லவராகி, மெய்ஞ் ஞானத் திருக்கடலாகிய வொருமெய்க் கடவுடன் றிருவடிமலரே தலைக் கணியெனக் கொண்டேத்தி, இருளிராவிடத்து விளங்கியவொரு