பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40

மீன் போலவும், பாலைச்சுரத் தரிதலர்ந்த பதுமம் போலவும் மெய்யாஞ் சுருதி விளக்காதிருளே மொய்த்த நாட்டின் கண்ணுங் கடவுளேற்றிய ஞானத் திருவிளக் கெரிப்பத் தெளிந்து, உணர்ந் தெங்கும் ஒரு விளக்கென நின்றுயர்ந்த திருவள்ளுவருரைத்த பலவற்றென்றை நான் தெரிந்துரைப்பத் துணிந்தேன். அந்நாயனர் தந்த ‘பயன்’ எனும் பெருங்கடலாழத்தின் மூழ்கியாங்குடை யருமணி யொருங் கெடுத்தொரு சிறு செப்பினடைத்தாற் போலத் திருவள்ளுவரது பயனெல்லாம் விரித்துப் பகரும்படி நான் வல்லனல்லே னாகயின், அக்கடற்றுறை நேர்ந்தொரு மணியெடுத்துக் காட்டலுணர்ந்தேன். அவர் சொன்ன குறளினொன்றே யிங்ஙன நான் விவரித்து ரைப்பத் துணிந்தேன். அஃதாவது,

மனத்துக் கண் மாசில னாத லனைத்தறன்
ஆக நீர பிற

என்பது. இல்லறத் துறவற மென்ற இவ்விரண்டனுள்ளும் அடங்கி நிற்குமெல்லாவறங்களும் மனத்தின் தூய்மையாற் பெறும் பெருமையே தரும மெனவும், மனத்தினுள் மாசு கொண்டவன் செய்யுந் தவமும் தானமும் மற்றை யாவு மறத் தினரவமாவதன்றி யறத்தின் பயனுளவல்லவெனவு மக்குறளிரு பயனிவையென விரித்துக் காட்டுதும். விரிப்பவே, மெய்யும் பொய்யும் விளக்கியுட் பயன்றரு மெய்யறத்தின் நன்மையே வெளி யாவிஃதொன்றுணர்ந்து நாமதற்கொப்ப நடந்தாலிது வீடெய்தும் வழியெனக் காணப்படும். பெரும் பொருணேர்ந்து பொய்ம்மணி கொள்வது கேடாயினும் பொருளை நேர்ந்தும் உடலினை வாட்டியும் உயிரை வருத்தியு மேற்கதி வீட்டிற் செல்லாச் சில பொய்யறங்களை யீட்டுவத்திலுங் கேடாமன்றாே? இதனை விலக்கித் தனது