பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42



இவர் தொல்காப்பியப் பாயிரத்துக்கும் முதற் சூத்திரக்திற்கும் விருத்தி உரை செய்துள்ளார். அஃது ஒரு பெரு நூலாகவே அமைந்துள்ளது. அதில் ஒரு காட்டு:

இங்ஙனம் வழக்கும் செய்யுளும் பயின்றார்க்கு அவற்றின் கண் ஒரு நிகரானவாய சொற்களும் ஒன்றாேடொன்று ஒவ்வாததுமாகியசெய்கைவேறு பாடுகளும் சொன் முடிபு பொருண் முடிபு வேறு பாடுகளும் நோக்கும் வழி, ‘இவையெல்லாம் வழா நிலையோ? சில வழுவமைதியோ? வழுவோ? கட்டளை யில்லையோ?’ எனவும் ஆசங்கை நிகழு மன்றே? அவ்வாசங்கை நீங்க எழுத்து முதல் மூன்றும் ஆராய்ந்து செந்தமிழியற்கை சிவனுதற்கு, இந்நூல் ஒரு தலையான் வேண்டப்படும் என்பதூஉம், அவை பயிலாதார்க்கு ஆசங்கையே நிகழாமையின் இந்நூல் பயன்படாது என்பதூஉம் விளக்கிய, ‘ஆயிரு முதலின் நாடிச் சிவணிய கண்டு எண்ணித் தொகுத்தான்’ என்றார். எனவே, வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து பின்னர் இந்நூல் கேட்டற்பாற்று என்பது புலப்பட்டது.[1]

நாடிச் சிவணிய, என்பது ‘ஓதி உணர்ந்தான்’ என்பது போலக் காரண காரியப் பொருட்டாய் நின்றது. ‘சிவணிய’ என்பது ‘செய்யிய’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். இஃது உணரமாட்டாதார், 'நாடிக்கண்டு எண்ணித் தொகுத்தான்'எனக் கூட்டி, ஒரு வினைமுதல் வினையாக்கி நாடிய ஆராய்ச்சியிற் குறைபாடு உடையவற்றிற்கு, முந்து துால் கண்டு என்றும், ‘ஆயிரு முதலிற் செந்தமிழ் இயற்கை சிவணிய’ எனக் கொண்டு கூட்டியும் இடர்ப் படுப.[2]

அற்றேல் ‘அகத்தியம் நிறைந்த தொல்காப்பியன்’ என்னாது, ‘ஐந்திரம் நிறைந்த தொல்


  1. தொல், பாயிர விருத்தி, பக். 5.
  2. தொல், பாயிர விருத்தி, பக். 6