பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46

சாவியும் ஒப்பிக்கப்போட்டு தம்மிட அதிகாரமும் அவர் வசம் பண்ணினார்கள்.

காலமே சீர்மையாகிய பிரான்சுக்கு ஒரு கப்பல் பாயெடுத்து ஓடிப்போனான் அந்தக் கப்பல் பேர் பினிச்சு. கப்பல் கப்பித்தான் பேர் முசேபு ரோசேல். இந்தக் கப்பலிலே ஏற்றிய தட்டு 1001.  செம்மரம் பாரம் 2000, மிளகு பாரம் 600. பின்னையும் சில்லறை தினுசுகளும் ஏற்றி காலமே கப்பல் பாயெடுத்துச் சீர்மைக்குப் பயணம் போனான். கோட்டைக்குப் பதினொரு பீரங்கியும் போட்டுப் பாயெடுத்தார்கள்.

இலங்கையில்

தமிழ் நாட்டில் மட்டுமின்றி அண்டை நாடாகிய இலங்கையிலும் 18 ஆம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை இருந்த நிலையைக் காணல் நல்லதன்றாே! ஓரிரு மேற்கோள் கண்டு செல்லலாம்;

இராசசியததின நனமைப பகுதிககாக வெணடி அபபடிக கொததவிதமாகச செயகிறது நலல தெனறு எங்களுககுத தொறறபபடுகுது ஆகாபடியால இததைச சகலரும அறிநது கொணடிருககும படிககும இததைக கொண்டு யாதொருததரும அறியமாடடோமெனறு சொலலக கூடாத விதததுககும சகலமான பெரும தங்கள தங்களுடைய நடடததுக்குப பரவசமாயிருககும படிககும உலாநதா பாஷையில உடபடப பாவிககபபடட இந்த ஊரட பாஷைகளாலும இந்த எங்களுடைய பணக காததை இங்கெயுடபட இதறகடுதத கொடடை ஸரதங்களிலும் பிற சிததம பணணவும் ஆணியறைநது வைககவும படுகிறதுண்டு.

இபபடிககு இலங்கைத தீவிலே ௯௭௱௰௫ ஆணடு அறபசி மாதம ௨௪ திகதி கொழுமபுக கோடடையிலே கொடுககபபடடது.