பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
92

மனதைக் கவர்ந்து மகிழ்வூட்டலை முற்கருத்தாகவும் அத்துடன் நல்லறிவூட்டலை உட்கருத் தாகவும் கொண்டது. கிரந்தத்தில்இடையிடையே கீழ்த்தரப்பட்டபாத்திரங்கள் பேசநேரும்பொழுது இலக்கணவழுச் செறிந்த அவர்தம் வாய்மொழிகளை அவ்வண்ணமே எழுதுவது வழக்கமாயினும், கிரந்த கர்த்தா நேரிற் கூறும் வரலாறுகள் வழுவின்றிருத்தல் வேண்டும். கல்வி தேர்ச்சியில்லாதாரும் பயன் பெறும்படி எழுதப்படும் கிரந்தம் ஆதலின், எவ்வளவு இலேசான நடையில் எழுதப்படினும் நலமே ஆயின் எளிதில் பொருள் தெளிதல் கருதி இலக்கண வழுக்களோடு எழுதப்படின் படிப்பவருள் இலக்கணம் பயின்றார் வெறுப்பையும், அப்பயிற்சியில்லார்—அவர்களுள் முக்கியமாய் இவ்விதக் கதைகளைப் பெரும்பாலும் வாசிப்போராகிய இலக்கண மறியாத பெண்பாலர்—வழுக்களை அறியமாட்டாராய் மயக்கத்தையும் அடைவாராதலின் நன்னடையில் எழுதுவதே தகுதியாகும்.

(பத்மாவதி சரித்திரம். முன்னுரை)


இவ்வாறு உரைநடை எழுதும் போது மக்கள் கையாளவேண்டிய வகையினையும் அவற்றின் வழியே சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி உரைநடையை வளர்த்தவர் திறத்தையும் காட்டிய, இந்த நூற்றண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த மற்றெரு புலவர் கருத்தையும் இங்கே காணலாம். அவர் யாரென்று நமக்குத் தெரியாது. அவர் கருத்தும் யாவருக்கும் ஏற்கத்தக்கதா என்பதும் ஆராய்ச்சியில்லை. ஆயினும் சென்ற நூற்றண்டின் பிற்பகுதியில் உரைநடை வளர்த்தவர் பற்றி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த இந்தக் கருத்தை மட்டும் காணலாம்.

வசனமெழுதுவோர் பிரம்மஸ்ரீ சூரியநாராயண சாஸ்திரியாரின்வழிச்சென்றுவசனமெழுதாமலிருந் தால்தான் பயனடையலாம். சாஸ்திரிகள் எழுதிய