பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடி வரும் வெண்ணிலவே ! அசைந்துவரும் வானவில்லே ! சங்க காலப் பாடினியும் பாணர்களும் பரிவோடும் பதைப்போடும் பக்கம் சேர்த்த சோடினிய கல்யாழே ! கோவலன்வாய் வரிப்பாட்டே ! தாயும் நானும் பாடமைந்த படுக்கையிலே பரிவோடு தொகுத்ததொகை நூலே ! பாலே ! சேலத்து மாம்பழமே ! செவ்வேரில் பழுத்தபலாப் பழமே ! உன்றன் கோலத்தில் குறுந்தொகையும் ! குறுங்கையில் குறளமுதும் கொண்ட ணைக்கும் காலத்தில் கலித்தொகையும் கனிமொழியில் இசையமுதும் காணு கின்றேன் , வேலொத்த விழிகளிலே விளையாடும் போர்ப்பரணி காணு கின்றேன், - குழந்தை 93