பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“காவிரிநீர் சித்திரையில் இளைத்தல் போலக் கண்ணகியே உன்னுடம்பு தேய்ந்து விட்டாய், விேரிக்கும் புன்னகையை அன்றி, இன்று துேறந்தாய் மற்றககை புலவர் சங்கப் பாவிரிக்கும் மதுரைக்குச் செல்லு வோமா பழம்பொருளை வாணிபத்தில் மீட்ப தற்கு பூவிரிக்கும் முகத்தழகி!' என்று கேட்டான் புறப்பட்டாள் கண்ணகியும் புள்ளி மான்போல். கொடிப்பந்தர் கொம்போடு சாய்வ தைப்போல் குலேவழை மரத்தோடு சாய்வ தைப்போல் அடிதோறும் விழுதிறங்கி அகன்றி ருக்கும் ஆலமரம அடியோடு சாய்வ தைப்போல் முடி மன்னன் பாண்டியனும், மாடக் கூடல் மூதூரில் வாழ்பவரும் உடன் இறக்க அடிசாய்ந்து கோவலனும் பினமாய் வீழ்ந்தான் ; அன்னங்டைக் கண்ணகியும் சிலையாய் ஆளுள். பொங்கிவரும் உணர்ச்சிக்குக் கரையி டாமல் புரண்டுவரும் காட்டாற்று வாழ்க்கை வாழ்வோன் அங்குசமில் லாப்பாகன் யானை ஏறி அழிவதைப்போல் கட்டாயம் அழிவான் என்று கங்கை கொண்ட தமிழ்நாட்டில் வாழு கின்ற கட்டறுந்த காளைகளுக் குணர்த்த வேண்டித் தங்கமலை சாய்வதைப்போல், இலக்கி யத்தில் தமிழ்வணிகன் கோவலனும் சாய்ந்து பட்டான். திருச்செங்கோடு கண்ணகி விழா சூன் 65 1 1 6 பனித்துளிகள்