பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளியைப் போலச் சிறிதாக இருந்தாலும் பிள்ளையா ரைக்கூடப் பிறப்பிக்கும் உயிர்ப்பொருள்கான். பொன்னை இழப்பர் பொருளிழப்பர் மங்கையர்கள் : என்னை இழக்க எப்போதும் சம்மதியார். கற்றைக் குழலழகி கண்ணகியின் ஒளிமிகுந்த நெற்றித் திலகத்தை நீக்கிய நெடுஞ்செழியன் ஆசை மனைவி ஆருயிரை அவனடியில் வீசி எறிந்ததேன் ? வீணை கரம்புதரும் கீதப் புதுப்பாட்டுக் கிளியரசி, தென்மதுரைப் பூதப்பாண் டியன்தேவி ? பொய்கையென்று தீக்குளத்தில் மாண்டு மடிந்ததேன் ? மஞ்சளில்லை என்றதல்ை. 142 பனித்துளிகள்