பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணத்தோட்டப் பைங்கொடி கொக்கரக்கோ எனக்கூவும் குடுமிச் சேவல் கூப்பாட்டைக் கேட்டவுடன் பரிதிச் செல்வன் அக்கரையில் கண்விழித்தான் இருட்டுப் பாயை அடிவானில் சுருட்டிவைத்தான் தான்வ ரைந்த செக்கர்வான் வெட்கமுற மாடி மீது செழுங்கதிரோன் எழுந்திருக்கக் கண்டான் ஓடி அக்கணமே மேகத்தில் மறைந்து பார்த்தான் , அழகரசின் ஆதிக்கம் அவள்தான் கோதை ! வெடித்தவுடன் பாளையிலே புதிய பூக்கள் வேர்மீதில் உதிர்வதைப்போல் கையைத் தூக்கி உடற்சோம்பல் முறித்தவுடன் அவளு டம்பின் ஒய்யாரம் காலடியில் சிந்தும் பட்டுப் படுக்கைமஞ்சம் இவ்வழகி மீண்டும் வந்து பள்ளிகொள்ள மாட்டாளா என்று நையும் ; அடிக்கால்கள் இவளுடம்பைத் தாங்கித் தாங்கி ஆனந்தக் களிப்பாலே செருக்குக் கொள்ளும். கண்ணிர்த்தவம்