பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடுங்குளிரால் வாடும்
காதல் நெருப்பு

ஒளிப்பளிங்குத் தண்ணீரில்
இருள்திரவம் வீழ்ந்து
ஒளிமாலை பசப்படைந்து
கற்பிழந்த நேரம்,

கொடுக்குப்போல் ஒருகோடு
நிலவாக வானில்
கொட்டுதற்குக் காத்திருந்து
கொல்லுகின்ற நேரம்.

அடைத்திருக்கும் தெருவாயில்
அழகுபெறும் நேரம்
அரும்பெல்லாம் சரமாகி
அரங்கேறும் நேரம்.

விட்டுவிட்டு விண்மலர்கள்
புறவிதழை அவிழ்த்து
விளையாடி ஒளிமணத்தை
விருந்துவைக்கும் நேரம்.


8

பனித்துளிகள்