பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பிரிக்காத செம்பொன் பேழை நவநிதியம், பேழை நவகிதியம் பிச்சைக்கு ஏங்குகிறேன்.

வாரி அமுதிறைக்கும் வசந்த இசைக்குயிலி; வசந்த இசைக்குயிலி வாய்ப்பாட்டுக் கேங்குகிறேன்,

குளித்துக் குளித்துக் குளிர்ந்த மழைமேகம் குளிர்ந்த மழைமேகம் குளிப்பாட்ட ஏங்குகிறேன்.

ஆக்கிக் குவித்த அறுசு வை ஆரமுது அறுசுவை ஆரமுது அரும்பசியால் வாடுகிறேன்.

கனிந்து குளிர்போக்கும் காதற் பெருநெருப்பு; காதற் பெருகெருப்பு கடுங்குளிரால் கடுங்குகிறேன்

10 பனித்துளிகள்