பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாணி மென்காற்று நடந்தது சாளரத்தில்

கண்விளக்கு மூடிக்

கடைதூங்கக் கண்கூசும் மின்விளக்கெல் லாமணத்து,
மின்னுகின்ற சின்னப்

படுக்கை அறைவிளக்கைப்

பாவையர்கள் ஏற்ற

அடிக்கடி நாய்குரைக்க

அவ்வூர் அடங்கியது.

மாடிமேல் கண்ணன்;

மடிமேல் அவன்கோதை

ஒடித் திரைவிலக்கி

உட்புகுந்த மென்காற்று

நாணி மெதுவாய்

நடந்தது சாளரத்தில்

12 பனித்துளிகள்