பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வட்டத்திற் குண்டா

 முதல்முடிவு என்பதெல்லாம்? ஒட்டுப் பலகை
 பிரித்தால் உடையாதா? 

கட்டுப்பட் டார்காதல்

 வட்டத்திற் குள்ளென்றால் 

விட்டுப் பிரிதல்

 மிகவெளிதா? பெற்றோர்கள்

கண்சோர்ந்த நாளெல்லாம்

 காதலர்கள் மாடியின்மேல் பண்சேர்ந்த வீணையும்
 பாட்டும்போல் ஒன்றானார்.

வீட்டுக்குள் மூடி

 மறைத்தாலும் தும்மலைப்போல் காட்டிக் கொடுப்பதுதான்
 காதலுக் குள்ளகுணம்.

விரைந்தொருநாள் மாடியின்

 மேல்வீரா சாமி 

மறைந்திருந்து கண்டான்;

 மடமயிலை அக்கண்ணன் 

ஆடை களைந்தே,

 அவளுடம்பைக் கூந்தலினால் 

மூடி மறைத்து

 விளையாடிக் கொண்டிருந்தான்

______________________________ 14 ______________________________