பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குலையீந்து போற்செழித்துச் சரிந்த உன்றன் கூந்தலன்றோ எனப்பிணித்த பாசம்; அந்த அலைமீது புரள்வதென்ருல் இன்னும் கூட அடுத்தடுத்துப் பத்துமுறை சாவேன்; அந்தத் தலைவிழுதை என்மீதில் இறக்கிக் கண்ணீர்த் தாரைகளால் குளிப்பாட்ட என்னைத் தேடிச் சிலையழகி ஒருமுறைநீ வந்தால் போதும்; செத்ததற்கு நான்வருந்த மாட்டேன்' என்ருன்.


கண்ணீர்த்தவம் 23