இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உள்ளங்கள் ஓரிரண்டும் கரைய,இன்ப
ஊற்றெடுக்க காதலர்கள் இரண்டு பேரும்
வெள்ளங்கள் கலப்பதுபோல் கலந்து, காதல்
விரிகடலில் சங்கமித்தார்;
பொருள் பொதிந்த கள்ளங்கள் பார்வையிலே வளர்த்தார் கண்ணில்
கனவுகளைத் தாலாட்டி வளர்த்தார்; வானம்
பிள்ளைநிலா வளர்ப்பதுபோல், இரண்டு பேரும்
பேரரசன் அரண்மனைக்குள், அலர் வளத்தார்.
கைவைத்தோர் எரிமலையை மூடி விட்டால்
கக்காமல் இருந்திடுமா அனற் குழம்பை?
மைவைத்த கண்ணுடையார் கள்ளக் காதல்
மறைத்தாலும் தெரியாமல் போவ தில்லை ?
பைவைத்த படவரவைப் போன்ற மன்னன்
பதைத்தெழுந்தான்; பாய்கின்ற வேங்கை யானான் கைவைத்துப் பறித்தெடுத்துக் காதற் பூவைக் காலாலே தேய்ப்பதற்குத் துணிந்து விட்டான்.
கோட்டைமதிற் சுவர்கடந்து படர்ந்த சோழர்
குலக்கொடியை அரண்மனைக்குள் காவல் வைத்தான்.
"ஈட்டியெங்கே! எழுத்தாணி யெங்கே ! சோழர்
இன்பத்துப் பாலெங்கே! சுவடி யேந்தும்
பாட்டுப்பிச் சைச்காரக் கவிஞன் எங்கே!
பருவைர மெங்கே கூ ழாங்கல் எங்கே !
தீட்டியகூர் வாள்மணந்தான் நடக்கும்; காதற்
திருடர்களுக் கென்றுகுலோத் துங்கன் சொன்னான்.
______________________________ பனித்துளிகள் 39 ______________________________