இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிரிக்கும் சிலையே! தேடியிங்கு வாராதே!
தேடிநீ வந்தால் தேனே என் உள்ளத்தில்
கருக்கொண்ட காதற் கற்பனைகள் கலைந்துவிடும் கற்பனைகள் கலைந்தாலும் கவலையில்லை; உனைப்பெற்ற விற்புருவ வேற்கண் அன்னையென்ன சொல்வாளோ? ஆனலும் நீயென்றன் ஆருயிரில் கலந்துவிட்டாய்!
தென்றல் இளங்காற்றே தேடியிங்கு வாராதே! தேடிநீ வந்தால் திருவிளக்கே! என்னுடைய கண்கள் வளர்க்கும் கனவு கலைந்துவிடும் கனவுகலைந் தாலும் கவலையில்லை; உனைப்பெற்ற தினவுத் தோள் தந்தை சீறியென்ன சொல்வானோ? ஆனாலும் நீயென்றன் ஆருயிரில் கலந்துவிட்டாய்!
கொட்டும் அனற்குழம்புக்
கூவலைச் செவிமடுத்துச்
சிட்டுப் பறந்துவந்தாள்;
செய்ய தமிழ்க்கவிஞன்
பொற்பதக்க மார்பில்
புதுவைரம் போற்பதிந்தாள்
______________________________ பனித்துளிகள் 40 ______________________________