பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிற்ப ரதியைச்

  சேர்த்தணைத்து,முன்னால் 

இழந்த பெருந்தனத்தை

  எய்திய ஏழையைப்போல் பழந்தமிழ்ச் சங்கப்
  பாட்டுத் தொகையுடம்பை உச்சி முதலாய்
  உள்ளங்கால் ஈறாக 

இச்சை யுடன்தடவி

  இன்ப சுகங்கண்டான்.


கண்கள் எனுஞ்சிவந்த

  காளவாய் கொப்பளித்த 

வெந்நீர் அருவியை

  வேர்ப்பலா முத்தத்தால் 

கட்டி அணையிட்டான்,

  கார்குழல் காட்டுக்குள்

எட்டி நுழைந்தேன்

  இளைப்பாறி வீற்றிருந்தான். ஆகம் பொருத்தி
  ஞானியர்போல் காதலர்கள் 

ஏக நிலையில்

  இருந்தார் தமையிழந்து!

சுற்றி யிருந்த

  சோலைகளும் மாமரமும்

நெற்றியில் பொட்டு

  நிலவணிந்த மாமலையும்


______________________________ பனித்துளிகள் 41 ______________________________