பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகுக்குப் பகையான அறிஞர் கோமான் ஆரணங்கைக் குறும்பாகப் பார்த்தார். 'கல்லில் இழைக்காத மணிச்சரமே ! பளிங்குப் பெண்ணே ! என்னழகும் உன்னறிவும் இணைந்து கூடிக் குழந்தைபல பிறந்துவிட்டால் என்ன செய்வாய் ? கூறெ'ன்று சிரிப்போடு கேட்டார் ; தேனில் குழைத்தெடுத்த சொல்லழகி, செழித்த வாழைக் குலைபோல வெட்கத்தால் தலைகு னிந்தாள். அறிஞனும் அழகியும் 51