பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞர்கலி-சலீமின் காதல்கதை மொகலாயக் கலையுலகின் இன்பக் கனவுகளுள் ஒன்று. அக்கனவின் ஒருதுளி இங்குக் காவிய வடிவம் பெற்றிருக்கிறது, வேந்தன் அணைத்த விளக்கு ஈரநிலா ஏன் கீழே வருவ தில்லை ? எனக்கேட்டான் , என்முகத்துக் கஞ்சி என்ருள். கூரான வாழைப்பூ குனித லென்ன ? கூறென்ருன் , என்மார்புக் கஞ்சி என்ருள், தேரோடி மறைவானேன்? என்று கேட்டான் , தெரியாதா? எனகாணிச் சிரித்தாள் ; போதும் ஆராய்ச்சி என்றுசொன்னன் அசைந்து சென்றே அறைக்கதவை ஓசையின்றி அடைத்து வந்தாள். நீக்குதுகில் ஆடைக்குள் கண்டி றிக்கும் நிலவைப்போல் கானிருக்க, அறையின் உள்ளே காக்குத்தீ வாய்விளக்கு நமக்கேன் ? என்று நாகரிக ம்ாய்க்கேட்டாள் ; உன்க டைக்கண் தாக்குதலை நேராகச் சந்திக் கத்தான் தளிர்க்கொடியே! எனக்கூறிச் சிரித்தான். ஆமாம் ! ஆக்கிவைத்த அறுசுவையை இருட்டுக் குள்ளே ஆர்விரும்பிச் சாப்பிடுவார் ? என்று சொன்னுள். 52 பனித்துளிகள்