பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் வாழும் ! துடிக்கின்ற நெடும்பகையை வாவா என்று துள்ளுகின்ற சுடர்வாள்போல் முறுக்கு மீசை ! வெடிக்கின்ற இடியோடு கனலைக் கக்கி விழிக்கின்ற மின்னலைப்போல் இமைக்கும் கண்கள்! படிக்கின்ற திருக்குறளின் ஏட்டைப் போலப் பக்குவமாய் அறங்கூறும் அறிவு நெற்றி ! வடிக்கின்ற தேனைப்போல் இனிக்கும் பேச்சு வாய்த்தபெருங் கவிஞனடா எட்டை காட்டான். இனிமேலோர் தேனில்லை இனிமை செய்ய இனிமேலோர் குயிலில்லை இனித்துக் கூவ இனிமேலும் இசையலைகள் எழுப்பிக் காட்ட இவ்வுலகில் வீணையில்லை எழும்பிச் சீற இனிமேலும் எரிமலைகள் எங்கும் இல்லை எனும்படியாய் இளஞ்சிரிப்புக் கண்ணன் பாட்டை இனிக்கின்ற குயிற்பாட்டைப் பாப்பா பாட்டை எழுச்சிமிக்க “கீதத்தை இசைத்துத் தந்தான். 74 பனித்துளிகள்