பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைபோன்ற பெருங்களிற்றுப் படையை வென்ற மாமன்னர் பேரரசும் மறைந்து போகும் வளையாத கொடுமுடியை விண்ணில் தீட்டி வளர்ந்திருக்கும் பனிமலையும் தூள்து ளாகும் கலையாத ஓவியம்போல் யமுனை ஆற்றின் கரைகிற்கும் கலைக்கோயில் அழிந்து போகும் குலையாத நெஞ்சுடைய கவிதை வேந்தன் குவித்துவைத்த கன்னூல்கள் என்றும் வாழும். ஆனந்தவிகடன் பாரதி மலரில் பரிசு பெற்ற முதற் பாடல், என்றும் வாழும் 75